உள்ளூர் செய்திகள்

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

Published On 2023-02-18 09:34 GMT   |   Update On 2023-02-18 09:34 GMT

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 45). டிரைவர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    சண்முகவேலின் வீட்டு அருகே 3 வயது சிறுமி உள்ளார். இந்த சிறுமி அடிக்கடி இவரது வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த சிறுமிக்கு சண்முகவேல் சாக்லேட், மிட்டாய் ஆகியவற்றை வாங்கி கொடுத்து வந்தார்.

    சம்பவத்தன்று வழக்கம்போல அந்த சிறுமி சண்முகவேலின் வீட்டிற்கு விளையாட சென்றது. அப்போது குடிபோதையில் இருந்த அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அழுது கொண்டே தனது வீட்டிற்கு சென்றது. சிறுமியிடம் அவரது பெற்றோர் என்ன நடந்தது என்று கேட்டனர். அப்போது சிறுமி, தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து சண்முகவேலிடம் கேட்டனர்.

    அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்தனர். பின்னர் அவரை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

    அனைத்து மகளிர் போலீசார் சண்முகவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Tags:    

    Similar News