13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
- ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க சிறுமியை நாக்பூருக்கு ரெயிலில் அழைத்து சென்று சிறுமிக்கு தாலி கட்டிய சந்தோஷ்குமார் பலாத்காரம் செய்தார்.
- பின்னர் வீட்டிலும், ஸ்கேட்டிங் பயிற்சி கொடுக்கும் இடத்திலும் பலாத்காரம் செய்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் சிறுமி ஸ்கேட்டிங் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.
இதற்காக அவர் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா கணவாய் புதூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது26) என்பவரிடம் பயிற்சிக்காக சென்றார்.
இதனை தொடர்ந்து பயிற்சி முடிந்து தினந்தோறும் சந்தோஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் சிறுமியை அழைத்து கொண்டு வீட்டில் விட்டு சென்றார்.
அப்போது சிறுமிக்கும், சந்தோஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க சிறுமியை நாக்பூருக்கு ரெயிலில் அழைத்து சென்றார்.
அங்கு சிறுமிக்கு தாலி கட்டிய சந்தோஷ்குமார் பலாத்காரம் செய்தார். பின்னர் வீட்டிலும், ஸ்கேட்டிங் பயிற்சி கொடுக்கும் இடத்திலும் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை பொம்மிடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி சிறுமியை பலாத்காரம் செய்த ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் சந்தோஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.