உள்ளூர் செய்திகள்

டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் பள்ளியில் தேர்வு முடிவுகளை செல்போனில் பார்க்கும் மாணவிகள்.

பிளஸ்-2 தேர்வில் நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளில் 92.45 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி

Published On 2022-06-20 09:47 GMT   |   Update On 2022-06-20 09:47 GMT
  • நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 2,157 மாணவர்கள், 3,205 மாணவிகள் எழுதி இருந்தனர்.
  • நெல்லையில் 1,865 மாணவர்கள், 3,092 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நெல்லை:

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ைவ 43 அரசு பள்ளிகளில் இருந்து 2,157 மாணவர்கள், 3,205 மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர்.

இதில் 1,865 மாணவர்கள், 3,092 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.45 சதவீத தேர்ச்சி ஆகும்.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை 53 பள்ளிகளில் இருந்து 3,363 மாணவர்கள், 4,063 மாணவிகள் என ெமாத்தம் 7,426 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.

இதில் 2,912 மாணவர்கள், 3,909 மாணவிகள் என 6,821 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.85 சதவீத தேர்ச்சி ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை 56 அரசு பள்ளிகளில் இருந்து 1,848 மாணவர்கள், 2,735 மாணவிகள் என மொத்தம் 4,583 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 1,650 மாணவர்கள், 2,637 மாணவிகள் என மொத்தம் 4,287 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.54 சதவீத தேர்ச்சி ஆகும்.

10-ம் வகுப்பு தேர்வை பொறுத்த வரை நெல்லை மாவட்டத்தில் 84 அரசு பள்ளிகளில் இருந்து 6,152 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5,211 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.70 சதவீத தேர்ச்சி ஆகும்.

தென்காசி மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகளில் இருந்து 7,177 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 6,059 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.42 சதவீத தேர்ச்சி ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 86 அரசு பள்ளிகளில் இருந்து 5,103 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4,578 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.71 சதவீத தேர்ச்சி ஆகும்.

Tags:    

Similar News