உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற 5 பேர் கைது

Published On 2022-09-21 08:00 GMT   |   Update On 2022-09-21 08:00 GMT
  • தேத்தாகுடி தெற்கு கீழவெளியில் முகமது அப்துல்நாசர் என்பவா் சாராயம் விற்றுக்கொண்டிருந்தார்.
  • பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி சாராயம் 110 லிட்டரை போலீசார் கொட்டி அழித்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேதாரண்யம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இங்கா்சால் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோடியக்காடு மீனாட்சித்தெருவைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 28), கோடியக்கரை காளிதாஸ் (40) ஆகியோர் பூநாரை இல்லம் பகுதியிலும், செம்போடை அன்பரசன் (42) என்பவர் அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திலும், தேத்தாகுடி தெற்கு கீழவெளியில் முகமதுஅப்துல்நாசர் (38) என்பவா் அப்பகுதியிலும் மற்றும் வேதாரண்யம் நகர் பகுதி மோட்டாண்டிதோப்பு பகுதியில் சாராயம் விற்ற ராஜா (32) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி சாராயம் 110 லிட்டரை கொட்டி அழித்தனர்.

Tags:    

Similar News