உள்ளூர் செய்திகள்

மாதவரம் அருகே லாரியை திருட முயன்ற 5 பேர் கும்பல் கைது

Published On 2022-06-12 15:16 IST   |   Update On 2022-06-12 15:16:00 IST
  • மஞ்சம்பாக்கம் அருகே வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களில் வரும் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கபடுவது வழக்கம்.
  • மாதவரம் அருகே லாரியை திருட முயன்ற 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை.

மாதவரம் ரவுண்டானா, மஞ்சம்பாக்கம் அருகே வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களில் வரும் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கபடுவது வழக்கம். இப்பகுதியில் மாதவரம் துணை கமிஷனர் குமார், உதவி கமிஷனர் அருள் சந்தோஸ் முத்து மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் படியாக இருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரகுமான் , மணிகண்டன்,  சஞ்சய், விக்னேஸ்வரன், ஆனந்த் என்பதும் அவர்கள் லாரியை திருட திட்டமிட்டு வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன், 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News