உள்ளூர் செய்திகள்

கோவையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

Published On 2023-04-02 09:03 GMT   |   Update On 2023-04-02 09:03 GMT
  • காரமடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • மாணவர்களிடமிருந்து இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை,

மேட்டுப்பாளையம் காரமடை அருகே பெரியபுத்தூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த காரமடை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காரமடை, பெரியபுத்தூர் பகுதியில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கி டமாக நின்றிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பூபதி (வயது20), சந்தோஷ்குமார் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒத்தகால் மண்டபம் மயிலேரிபாளையத்தை சேர்ந்த சூரியா (19) மற்றும் பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியை சேர்ந்த முத்துகுமார் (21) கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News