உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி மணல் கடத்திய 3 பேர் கைது

Published On 2023-10-24 09:45 GMT   |   Update On 2023-10-24 09:45 GMT
  • 2 சரக்கு வாகனங்களில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தனர்.
  • மணல் கடத்திய வழக்கில் 3 பேரையும் கைது செய்தனர்.

பேராவூரணி:

பேராவூரணி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பேராவூரணி சிதம்பரம் ரோடு பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் (29), பட்டத்தூரணி கிராமத்தைச் சேர்ந்த முரளிதரன் (21), சாணாகரை கிராமத்தைச் சேர்ந்த பிரபு (30), ஆகிய மூன்று பேரும் 2 சரக்கு வாகனத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தனர்.

அப்போது பேராவூரணி காவல்துறையினர் 2 வாகனங்களையும் மறித்து சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது அவர்கள் உரிய அனுமதியின்றி மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் மணல் கடத்திய வழக்கில் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Tags:    

Similar News