உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது

Published On 2023-01-13 08:50 GMT   |   Update On 2023-01-13 08:50 GMT
  • போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
  • தனித்தனியாக சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது குளத்தூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது42), மூரார்பாளையத்தை சேர்ந்த கருப்பன் (50), விரியூரை சேர்ந்த ரமேஷ் (39) ஆகிய 3 பேரும் தனித்தனியாக சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 200 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News