உள்ளூர் செய்திகள்

கோவை மாநகரில் கஞ்சா பதுக்கி விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

Published On 2022-07-25 10:00 GMT   |   Update On 2022-07-25 10:00 GMT
  • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
  • கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

கோவை 

கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கும்பல்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சின்னவேடம்பட்டி துடியலூர் ரோட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சரவணம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செல்லமணி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.


அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா, ஒரு மெபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சாய்பாபா காலனி பெரியார் நகரை சேர்ந்த அஜித் (வயது 25), கருணாநிதி நகரை சேர்ந்த ஷர்மிளா பேகம் (41) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.


இதேபோல சரவண ம்பட்டி போலீசார் சங்கனூர் ரோடு டாஸ்மாக் கடை அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற உடையாம்பாளையத்தை சேர்ந்த சிவா என்ற சிவபிரசாத் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.  

Tags:    

Similar News