உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது

Published On 2023-07-02 08:50 GMT   |   Update On 2023-07-02 08:50 GMT
  • சுப்பையா தூத்துக்குடி திரேஸ்புரம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.
  • 3 பேரையும் கைது செய்த போலீசார் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி 4-ம் கேட் விஸ்வபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா. தச்சு தொழி லாளியான இவர் நள்ளிரவில் வேலை முடிந்து தூத்துக்குடி திரேஸ்புரம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

செல்போன் பறிப்பு

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 3 வாலிபர்கள், திடீரென அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சுப்பையா வடபாகம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில் தாளமுத்துநகரை சேர்ந்த முத்துராஜ் (20), முத்துராமன்( 19) மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் உட்பட 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்க ளிடமிருந்து செல்போன் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர்களுக்கு வேறு வழிப்பறி சம்பவங் களில் தொடர்பு உள்ளதாக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News