உள்ளூர் செய்திகள்

தாளமுத்துநகரில் 1 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது

Published On 2022-11-27 14:42 IST   |   Update On 2022-11-27 14:42:00 IST
  • லூர்தம்மாள்புரம் கல்லறை தோட்டம் பகுதியில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
  • போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் லூர்த ம்மாள்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லறை தோட்டம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

உடனடியாக அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அதனை பறிமுதல் செய்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த லூர்தம்மாள்புரம் நரேஷ் (வயது 30), தாளமுத்துநகர் ராஜீவ்காந்தி குடியிருப்பு இசக்கிமுத்து(40), விளாத்தி குளம் பணையூரைச் சேர்ந்த துரைமுருகன்(26) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News