தியாகதுருகம் அருகே பெங்களூர் போலீசாரை தாக்கிய 3 பேர் கைது
- தியாகதுருகம் அருகே பெங்களூர் போலீசாரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நவீன் பிரகாஷை தேடி வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகம்துருகம் அருகே சித்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பிரகாஷ் (வயது 25). இவர் தனது மனைவி ராஜேஸ்வரி (25) என்பவருடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது ராஜேஸ்வரி கெம்பை கவுடா போலீஸ் நிலையத்தில் கணவர் தன்னை கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நவீன் பிரகாஷை தேடி வந்தனர்.
இந்நிலையில் பெங்க ளூர், கெம்பை கவுடா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மனோஜ் குரானா தலை மையிலான 3 போலீசார் நவீன் பிரகாஷை தேடி சித்தால் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற னர். அப்போது வீட்டில் இருந்த நவீன் பிரகாஷின் தாய் தையல்நாயகி (43), தங்கை பிரியா (24), தாத்தா அண்ணாமலை (76) ஆகியோர் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து திட்டி, தாக்கியதாகவும், மேலும் போலீசார் வந்த வாடகை கார் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தினர். இதில் காயம் அடைந்த போலீசார் சித்தன்ன கவுடா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து போலீசார் சித்தன்ன கவுடா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தையல்நாயகி, பிரியா, அண்ணாமலை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.