துடியலூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 28½ பவுன் நகை கொள்ளை
- கஸ்தூரி தனது குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்றார்.
- கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களும் சேகரிக்கப்பட்டது.
கவுண்டம்பாளையம்,
கோவை துடியலூர் தொப்பம்பட்டி ஆனந்தா கார்டன், நியூ எக்ஸ்டென்ஸ் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது65). ஓய்வு பெற்ற ஆசிரியை.
இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து, இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் அந்த பகுதி யில் வசித்து வருகிறார்.
கடந்த 26-ந் தேதி கஸ்தூரி தனது மகன் மற்றும் மருமகளுடன் தங்க ளது சொந்த ஊரான மதுரை கே.கே.நகரில் நடந்த உறவினர் ஒருவரின் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நேற்றிரவு தங்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியான கஸ்தூரி மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததுடன் அதில் இருந்த துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
இதையடுத்து பீரோவில் வைத்துள்ள நகைகள் இருக்கிறதா என கஸ்தூரி தேடி பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 14 பவுன் வைர நெக்லஸ், 7½ பவுன் தங்க நெக்லஸ், கம்மல், வளையல் உள்பட மொத்தம் 28½ பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது.
இவர்கள் ஊருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அதன்பின்னர் உள்ளே நுழைந்து, நகையை கொள்ளையடித்து சென் றது தெரியவந்தது.
இதுகுறித்து கஸ்தூரி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரை ந்து வநது விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களும் சேகரி க்கப்பட்டது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.
இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை கொள்ளையடித்து சென்ற வர்களை தேடி வருகின்ற னர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.