உள்ளூர் செய்திகள்
திட்டச்சேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-04 14:20 IST   |   Update On 2022-06-04 14:20:00 IST
திட்டச்சேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி முதல்நிலை பேரூராட்சி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் பிளாஸ்டிக் இல்லா திட்டச்சேரி பேரூராட்சி விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர்கண்ணன் முன்னிலை வகித்தார். 

மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவியா பாரிகள் மற்றும் பொதுமக்க ளுக்கு மஞ்சப்பை, விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இந்த பேரணி திட்டச்சேரி பேரூராட்சி வளாகத்தில் தொடங்கி திட்டச்சேரி கடைத்தெரு வழியாக கொந்தகை கடைத்தெரு வரை நடைபெற்று மீண்டும் திட்டச்சேரி பேரூராட்சி வளாகத்தில் முடிவடைந்தது.இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகம்மது சுல்தான். 

வரித்தண்டலர் ஜெகவீரபாண்டியன் மற்றும் அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News