பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்க்க ஒருங்கிணைந்த சேவை மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் - மேயர் தகவல்
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மேயர் தினேஷ்குமார், மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ஐ.சி.சி.சி.) குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அனைத்து துறைகளுடன் இந்த மையம் இணைக்கப்பட்டுள்ளது. 310 குறை–களை பொதுமக்கள் குறுந்தகவல், இணையதளம் மூலம் தெரிவித்தால் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் நவீன வசதிகளுடன் இணையதளம் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மேயர் தெரிவித்தார்.