உள்ளூர் செய்திகள்
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மாநில அளவிலான கால்பந்து போட்டி

Published On 2022-05-30 09:08 GMT   |   Update On 2022-05-30 09:08 GMT
திருத்துறைப்பூண்டியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி  திருத்துறைப்பூண்டி ஸ்போர்ட்ஸ் அகடெமி சார்பில் 2 நாட்கள் நடைப்பெற்றது. அதன் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு  ராஜநாராயணன்   வரவேற்றார். 

வெற்றி  பெற்றவர்களுக்கு நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன் பரிசளித்து வாழ்த்தினார்.பாரதமாதா எடையூர் மணிமாறன், ராய் டிரஸ்ட் நிறுவனத்தலைவர்  நா.துரை ராயப்பன், ஆடிட்டர் ஜவகர், வழக்கறிஞர் நாகராஜன், கமல் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடெமி செயலாளர்  விஜயகுமார், ராஜசேகர், மாரிமுத்து, ஆனந்தன், இளையராஜா, பார்த்திபன், ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

முதல் பரிசை கடலூர் அணியும், இரண்டாம் பரிசை திருச்சி  அணியும், 3வது பரிசை பொதக்குடி அணியும், நான்காம் பரிசை  மன்னார்குடி அணிக்கும் வழங்கப்பட்டது. முடிவில் நல்நூலகர். ஆசைத்தம்பி  நன்றியுரை கூறினார்.

Tags:    

Similar News