உள்ளூர் செய்திகள்
கபடி விளையாடும் வீரர்கள்.

மாநில அளவிலான கபடி போட்டி

Published On 2022-05-30 14:21 IST   |   Update On 2022-05-30 14:21:00 IST
திருப்பூண்டியில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த திருப்பூண்டியில் 12-ம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 27 மாவட்டங்களிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர்.

விறுவிறுப்பாக நாக்அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் திருப்பூண்டி நண்பர்கள் அணியினர் 15,000 ரொக்கம், 2வது இடம் பெற்ற மீமிசல் அணியினருக்கு 12,000 ரொக்கம், 3ம் இடத்தை பிடித்த திருவண்ணாமலை அணியினருக்கு 10,000 ரொக்கம் மற்றும் 3 அணியினருக்கும் சுழற்கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. போட்டியை 100-க்கும் மேற்பட்ட பார்வையா ளர்கள் கண்டு ரசித்தனர்.
Tags:    

Similar News