உள்ளூர் செய்திகள்
கோரிக்கை

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை

Published On 2022-05-30 12:43 IST   |   Update On 2022-05-30 12:43:00 IST
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மின் ஊழியர் மத்திய  அமைப்பு   மாவட்ட மாநாடு நடந்தது. 

இதில் ஒய்வுபெற்ற நல அமைப்பு மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி கொடியேற்றினார். மாநில துணைத் தலைவர் குருவேல்  தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் வண்ணமுத்து சிறப்புரையாற்றினார். வரவேற்பு குழு செயலாளர் கணேசன் வரவேற்றார். 

சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சேதுராமன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், வரவேற்பு குழுத் தலைவர் ராமன் ஆகியோர் பேசினர்.  

மாவட்ட தலைவராக உமாநாத், மாவட்ட செயலாளராக கருணாநிதி,  பொருளாளராக மோக னசுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் தொழி லாளர்களை    நிரந்தரம் செய்ய வேண்டும்.  தொழி லாளர்களுக்கு தினந்தோறும் கூலி ரூ.380 வழங்க வேண்டும்.     பகுதிநேர தொழிலாளர்களை முழு நேர பணியாளராக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் மீட்டர்களை கணக்கீடு செய்யும் மதிப்பீட்டாளர் காலிபணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, பூவந்தி ஆகிய மின்வாரிய அலுவ லகங்களை புதிதாக கட்டு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலகங்களில் உள்ள  காலாவதியான கணினியை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News