உள்ளூர் செய்திகள்
மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர்கள்.

நாமக்கல்லில் உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

Published On 2022-05-29 08:27 GMT   |   Update On 2022-05-29 08:27 GMT
நாமக்கல்லில் உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

இப்போட்டியை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் மற்றும் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் திரளாக பங்கேற்றனர். 

இந்த மாரத்தான் போட்டியை நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
Tags:    

Similar News