உள்ளூர் செய்திகள்
தீக்குளிக்க முயன்ற சங்கீதா.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2022-05-27 11:28 GMT   |   Update On 2022-05-27 11:28 GMT
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
 
சேலம்:

சேலம் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்தவர் பாபு என்ற டாக் பாபு. இவரது மனைவி சங்கீதா (வயது 30). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் வெண்பா என்ற பெண் குழந்தை உள்ளது.

மேலும் சங்கீதா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் பாபு மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமலூர் போலீசார் செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

இதற்கிடையே சங்கீதாவின் தந்தை மாதையனையும் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு என அழைத்துச் சென்றுள்ளனர் .ஆனால் அவர் குறித்து விசாரித்தபோது அவர் தற்போது எங்கு உள்ளார் என்ற விவரத்தை போலீசார் கூற மறுத்துவிட்டனர்.

இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சங்கீதா தனது குழந்தையுடன் சேலம் கலெக்டர்  அலுவலகத்திற்கு வந்தார். 

 திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.   அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு போலீஸ் நிலையத்தை வைத்து விசாரணைநடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

Similar News