உள்ளூர் செய்திகள்
தற்கொலை

திண்டிவனம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-05-27 10:29 GMT   |   Update On 2022-05-27 10:29 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வைரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதுரை மகன் அசோக் (வயது 32), இவரது மனைவி ஷர்மிளா(23) இவர்களுக்கு  2ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. கடந்த 3 நாட்களாக ஷர்மிளா அவரது தாய் வீடான பெரமண்டூர் கிராமத்தில் இருந்தவரை நேற்று மாலை அசோக் வைரபுரம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. பின்னர், அசோக் வெளியே சென்ற நிலையில், ஷர்மிளா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News