உள்ளூர் செய்திகள்
நவீன இந்தியாவை செதுக்கிய சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேரு- விஜய் வசந்த்
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் சிதறிக் கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்து இன்று நாம் காணும் மாபெரும் தேசமாக உருவாக்க நேரு அவர்கள் எடுத்த முயற்சிகள் என்றும் சரித்திரத்தில் பதிந்திருக்கும் என விஜய் வசந்த் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
சுதந்திர பாரதத்தின் முதல் பிரதமர் நவீன இந்தியாவை செதுக்கிய சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், எழுச்சிக்காகவும் அவர் ஆற்றிய பங்கினை நன்றியுடன் நினைவு கூருவோம்.
இந்தியாவிற்கு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற அவர் நடத்திய போராட்டங்கள் செய்த தியாகங்கள் ஒன்றிரண்டு அல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் சிதறிக் கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்து இன்று நாம் காணும் மாபெரும் தேசமாக உருவாக்க நேரு அவர்கள் எடுத்த முயற்சிகள் என்றும் சரித்திரத்தில் பதிந்திருக்கும்.
கல்வி, உட்கட்டமைப்பு வேளாண்மை, விஞ்ஞானம், பாதுகாப்பு என எல்லா துறைகளிலும் இந்தியா சிறந்து விளங்க வித்திட்டவர் பண்டிட் ஜவகர்லால் நேரு. நவீன இந்தியாவை செதுக்கிய இந்த சிற்பியை நினைவுகூர்ந்து அவருக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
சுதந்திர பாரதத்தின் முதல் பிரதமர் நவீன இந்தியாவை செதுக்கிய சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், எழுச்சிக்காகவும் அவர் ஆற்றிய பங்கினை நன்றியுடன் நினைவு கூருவோம்.
இந்தியாவிற்கு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற அவர் நடத்திய போராட்டங்கள் செய்த தியாகங்கள் ஒன்றிரண்டு அல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் சிதறிக் கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்து இன்று நாம் காணும் மாபெரும் தேசமாக உருவாக்க நேரு அவர்கள் எடுத்த முயற்சிகள் என்றும் சரித்திரத்தில் பதிந்திருக்கும்.
கல்வி, உட்கட்டமைப்பு வேளாண்மை, விஞ்ஞானம், பாதுகாப்பு என எல்லா துறைகளிலும் இந்தியா சிறந்து விளங்க வித்திட்டவர் பண்டிட் ஜவகர்லால் நேரு. நவீன இந்தியாவை செதுக்கிய இந்த சிற்பியை நினைவுகூர்ந்து அவருக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.