உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் இந்து (வயது 18).
இவர் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த மாணவி இந்து திடீரென விஷத்தை குடித்து மயங்கி விட்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மாணவி இந்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து, எதற்காக மாணவி தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் இந்து (வயது 18).
இவர் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த மாணவி இந்து திடீரென விஷத்தை குடித்து மயங்கி விட்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மாணவி இந்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து, எதற்காக மாணவி தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.