உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

புதுக்கோட்டையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்

Published On 2022-05-26 15:46 IST   |   Update On 2022-05-26 15:46:00 IST
புதுக்கோட்டையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடை பெறுகிறது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:  

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  நாளை 27.05.2022 (வெள்ளிக் கிழமை) அன்று 

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது.  

இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட  

வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
 

மேலும், வேலைநாடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News