தமிழ்நாடு செய்திகள்
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்! - அமைச்சர் தங்கம் தென்னரசு
- தமிழ்நாடு என்ற பெயரை மாநிலத்திற்குச் சூட்டி, இருமொழிக் கொள்கையால் தமிழரைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள்.
- பேரறிஞரின் பாதையே, சமூகநீதியைப் பேணிக் காத்து, ஆதிக்கம் எனப்படும் பேதைமையை ஒழிக்கும், பேராயுதம்.
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை ஒட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு என்ற பெயரை மாநிலத்திற்குச் சூட்டி, இருமொழிக் கொள்கையால் தமிழரைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள்.
'மக்களிடம் செல். மக்களுடன் வாழ். அவர்களிடமிருந்து கற்றுக்கொள். அவர்களை நேசி. அவர்களுக்குச் சேவை செய்! அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு' என்பது அண்ணா நமக்கு வகுத்துத் தந்த அரசியல் பாதை. பேரறிஞரின் பாதையே, சமூகநீதியைப் பேணிக் காத்து, ஆதிக்கம் எனப்படும் பேதைமையை ஒழிக்கும், பேராயுதம்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.