உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை அருகே கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து- ஒருவர் பலி

Published On 2022-05-26 08:49 GMT   |   Update On 2022-05-26 08:49 GMT
நெல்லை அருகே கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை:

 சங்கரன்கோவில் அருகே உள்ள கரும்பாட்டூரை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 30). சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் முகேஷ் (46). இவர்கள் 2 பேரும் காரில் நெல்லைக்கு பொருட்கள் வாங்க வந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த வசந்தகுமார் (22), லீசா (23), ரோஷ்லின் (55), செல்வம் (40), திரவியம் (43), எலிசபெத் (65) ஆகிய 6 பேரும் தங்களது காரில்  நெல்லைக்கு புறப்பட்டனர்.

 இவர்கள் நேற்று நள்ளிரவு நெல்லை அருகே உள்ள  அழகியபாண்டியபுரத்தில் வந்த போது 2 காரும் நேருக்கு நேர் மோதி கொன்டன.

இதில் பலத்த காயமடைந்த 8 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News