உள்ளூர் செய்திகள்
பணகுடி அருகே கணவரால் தீ வைக்கப்பட்ட இளம்பெண் பரிதாப சாவு
பணகுடி அருகே கணவரால் தீ வைக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள நெருஞ்சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பவளஜோதி (வயது 30). கணவன்-மனைவிக்கிடையே குடும்பத்தகராறு காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 4-ந்தேதி அவர்க–ளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சுரேஷ் மண்எண்ணையை எடுத்து பவளஜோதி மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து அலறித்துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து பணகுடி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பவளஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள நெருஞ்சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பவளஜோதி (வயது 30). கணவன்-மனைவிக்கிடையே குடும்பத்தகராறு காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 4-ந்தேதி அவர்க–ளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சுரேஷ் மண்எண்ணையை எடுத்து பவளஜோதி மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து அலறித்துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து பணகுடி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பவளஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.