உள்ளூர் செய்திகள்
மாயமான தமிழரசி, 6 மாத கைக்குழந்தை.

கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்

Published On 2022-05-25 09:23 GMT   |   Update On 2022-05-25 09:23 GMT
எடப்பாடி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் திடீரென மாயமானார்.
எடப்பாடி:

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணம்பட்டி ஊராட்சி, மோட்டூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி இவரது மகள் தமிழரசி(23) இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 

இத்தம்பதியினருக்கு 2 வயது மற்றும் 6 மாதத்தில் என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 
இந்நிலையில் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்த தமிழரசி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெற்றோருடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசி தனது 6 மாத கைக்குழந்தையுடன் திடீரென மாயமானார். 

கை குழந்தையுடன் மாயமான தமிழரசியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் அவர் கிடைக்காத நிலையில்,கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன தமிழரசியை யாரேனும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார்களா? அல்லது அவர் வேறு எதேனும் குடும்ப பிரச்சினைக்காக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News