உள்ளூர் செய்திகள்
தீக்குளிக்க முயன்ற முதியவர்

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்

Published On 2022-05-24 12:26 GMT   |   Update On 2022-05-24 12:26 GMT
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்துள்ள மல்லவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவருக்கும் இவரது தம்பி பாஸ்கரனுக்கும் வீடு தொடர்பாக பிரச்சினை இருந்துவருகிறது.

இது தொடர்பாக மானாமதுரை காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் சிவகங்கை எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். அதிலும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்த முதியவர் கணேசன், கலெக்டர் அலுவலக வாயிலில் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

இதனை கண்ட அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News