உள்ளூர் செய்திகள்
தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்.

மேட்டூரில் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு

Published On 2022-05-23 09:18 GMT   |   Update On 2022-05-23 09:18 GMT
மேட்டூர் காவிரி கிராஸ் அருகே கால்வாய் கரையில் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காவிரிக்கரை பகுதியில் உள்ள கால்வாய் கரையில் ஒரு மோட்டார்சைக்கிள் கிடந்தது. அது தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. 

அந்த வழியாக சென்றவர்கள் அதை பார்த்து மேட்டூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த மோட்டார்சைக்கிளை கைப்பற்றினர். 

அதை தீவைத்து எரித்தவர்கள் யார்? அந்த மோட்டார்சைக்கிளில் வந்தவர் யார்? முன்விரோதத்தில் மோட்டார்சைக்கிளை  கடத்தி கொண்டு வந்து தீ வைத்தனரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News