உள்ளூர் செய்திகள்
கைது

செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடிய 2 பேர் கைது

Published On 2022-05-18 10:25 GMT   |   Update On 2022-05-18 10:25 GMT
செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டை சத்திரம் ெமயின் ரோட்டைசேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 38). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் இருக்கும்போது இவரது செல்போனில் அலாரம் ஒலித்ததால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு பொதுமக்கள் உதவியுடன் சென்று பார்த்தார்.

அப்போது கள்ளக்குறிச்சிமூரார் பாளையம் சப்ருதீன் (43) பண்ருட்டிபோலீஸ் லைன் 7வது தெருவை சேர்ந்த அன்வர் (28) ஆகியோர் டவரில் பேட்டரிகளை திருடினர். அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News