உள்ளூர் செய்திகள்
நசியனூரில் சாராய ஊறல் போட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சித்தோடு:
நசியனூரில் சாராய ஊறல் போட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பவானி அருகே உள்ள நசியனூர் சித்தன் குட்டை கிராமத்தில் சாராய ஊறல் இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடம் சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் நசியனூர் சித்தன் குட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (33) என்பவர் பிளாஸ்டிக் குடத்தில் விஷ நொடியுடன் கூடிய சாராய ஊறல் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சாராய ஊறலை வைத்து இருந்த குற்றத்திற்காக மூர்த்தியை போலீசார் கைது செய்து அவர் வைத்திருந்த 15 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.