உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே டிராக்டர் திருட்டு
சங்கராபுரம் அருகே டிராக்டர் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே நெடுமானுரைச் சேர்ந்தவர் கருணாகரன். விவசாயி. இவருக்கு சொந்தமான டிராக்டரை நெடுமானுார் பால் ஸ்டோர் முன் இரவு நிறுத்தி வைத்திருந்தார். காலை பார்த்தபோது டிராக்டரை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.