உள்ளூர் செய்திகள்
முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

கணவருக்கு ஆடியோ பதிவு அனுப்பிவிட்டு முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

Published On 2022-05-16 11:18 GMT   |   Update On 2022-05-16 11:18 GMT
சிதம்பரம் அருகே முன்னாள் காதலனுடன் ஓடிய இளம்பெண்ணை மீட்டு தருமாறு கணவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே புதுசத்திரம் போலீஸ் சரகம் தீர்த்தன கிரி கிராமத்தை சேர்ந்தவர் பாரதிதாசன். இவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கலைவாணி (வயது 27). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனவே கடந்த 15-ந் தேதி கலைவாணி நெல்லிக்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் பாரதிதாசன் தனது மாமியாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது கலைவாணி அங்கு வரவில்லை என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாரதிதாசன் தனது மனைவியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே கலைவாணி தனது கணவரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினார். அதில் என்னை தேடவேண்டாம். நான் முன்னாள் காதலன் விகாஷ் என்பவருடன் சென்றுள்ளேன் என ஆடியோ பதிவு செய்து அனுப்பி உள்ளார்.

பதறிபோன பாரதிதாசன் இதுபற்றி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கூறியுள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News