உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்குதல்

சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2022-05-16 10:31 GMT   |   Update On 2022-05-16 10:31 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கல்வராயன்மலை வெதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். அவரது மகன் தீர்த்தமலை(வயது26) நெல் அறுவடை எந்திர டிரைவர்.

இவர் நெல் அறுவடை எந்திரத்தை, பூட்டை சாலையில் உள்ள தனியார் வாட்டர் சர்வீஸ் சென்டரில் வாட்டர் சர்வீஸ் செய்தார். அப்போது, அவருக்கு மின்சாரம் தாக்கியதில் தீர்த்தமலை தூக்கி வீசப்பட்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே தீர்த்தமலை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News