உள்ளூர் செய்திகள்
மாயம்

சங்கராபுரம் அருகே பிளஸ் 2 மாணவி மாயம்

Published On 2022-05-16 15:56 IST   |   Update On 2022-05-16 15:56:00 IST
சங்கராபுரம் அருகே பிளஸ் 2 மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே முக்கனுாரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் திடீர் என மாயமானார். அதிர்ச்சி அடைந்த தங்கவேல் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தங்கவேல் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News