உள்ளூர் செய்திகள்
மழை

பண்ருட்டி பகுதியில் கொட்டி தீர்த்த கோடை மழை

Published On 2022-05-16 10:25 GMT   |   Update On 2022-05-16 10:25 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அண்ணா கிராமம், தொரப்பாடி, கண்டரக்கோட்டை, காடாம்புலியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அண்ணா கிராமம், தொரப்பாடி, கண்டரக்கோட்டை, காடாம்புலியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது.

வெயில்அளவு சதம் அடித்தது. அனல்காற்று வீசியது. மக்கள் வெயில் கொடுமை தாங்காமல் பெரிதும் அவதிப்பட்டனர். இதற்கிடையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இடி, மின்னலுடன் திடீர் மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ள நீராக பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஊர்ந்தபடியே சென்றனர்.
Tags:    

Similar News