உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணா தண்ணீர்

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து 610 கன அடியாக அதிகரிப்பு

Published On 2022-05-16 08:19 GMT   |   Update On 2022-05-16 08:19 GMT
பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 8ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் இது படிப்படியாக அதிகரித்தது.

இன்று காலை வினாடிக்கு 610 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. வரும் நாட்களில் கிருஷ்ணா நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 27.66 அடி ஆக பதிவானது.

1.257 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் பேபி கால்வாய் வழியாக சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News