உள்ளூர் செய்திகள்
மது குடித்ததை கண்டித்ததால் தந்தையை வெட்டிய மகன்

மது குடித்ததை கண்டித்ததால் தந்தையை வெட்டிய மகன்

Published On 2022-05-15 12:05 IST   |   Update On 2022-05-15 12:05:00 IST
திருவள்ளூர் அருகே மது குடித்ததை கண்டித்த தந்தையை வெட்டிய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே உள்ள திருமணிகுப்பம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (60).இவரது மகன் லட்சுமணன் (26).இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. லட்சுமணன் அடிக்கடி மது குடித்து வந்தார். இதனை வெங்கடேசன் கண்டித்தார். இது தொடர்பாக தந்தைமகன் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் அருகில் இருந்த கத்தியால் தந்தை வெங்கடேசனின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார்.

Similar News