உள்ளூர் செய்திகள்
மழை

தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தில் அக்னி வெயில் குறைந்தது

Published On 2022-05-14 10:34 GMT   |   Update On 2022-05-14 10:34 GMT
கோடை வெயில் நேரத்தில் அக்னி நட்சத்திர மழை பொழிந்ததால் தற்போது வெப்பத்தின் கோரத்தாண்டவம் குறைந்துள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 48 ஆண்டுகால இல்லாத வரலாற்றில் கொட்டி தீர்த்தது. இதனால் தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து விளைநிலங்களை மூழ்கடித்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இருந்தாலும் விவசாயிகள் தங்களது சொந்த செலவில் சமபடுத்தி தற்போது விவசாயத்தை தொடங்கியுள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால், அதற்கு எதிர்மறைபோல் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் கோடை வெப்பம் தணிந்துள்ளது. கடலூர் நகர் முழுவதும் பகல் நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. கோடை வெயில் நேரத்தில் அக்னி நட்சத்திர மழை பொழிந்ததால் தற்போது வெப்பத்தின் கோரத்தாண்டவம் குறைந்துள்ளது.

Tags:    

Similar News