உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே மரத்தின் நடுவில் குலை தள்ளிய அதிசய வாழை
பண்ருட்டி அருகே மரத்தின் நடுவில் குலை தள்ளிய அதிசய வாழையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே பனப்பாக்கத்தில் விவசாயி ஒருவர் வீட்டின் தோட்டத்தில் வாழை மரங்கள் வளர்த்து வருகிறார். இதில் ஆறடி உயரம் வளர்ந்த பூவன் வகையை சேர்ந்த ஒரு வாழைமரத்தில் 3 அடி உயரத்திற்கு மரத்தின்நடுப்பகுதியில் கடந்த மாதம்குலை தள்ளியது. பின்னர் பூவில் இருந்து காய்கள் காய்த்து தற்போது வாழைத்தாராக வருகிறது.
பொதுவாக வாழை மரங்கள்மேற்பகுதியில் இலைகளுக்கு இடையே இருந்தே குலைதள்ளுவது வழக்கம். ஆனால் மரத்தின் இடையே குலை தள்ளிய இந்த அதிசய வாழையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.