உள்ளூர் செய்திகள்
தற்கொலை

பண்ருட்டியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2022-05-14 10:27 GMT   |   Update On 2022-05-14 10:27 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மனைவி ரஞ்சினி (வயது 22). இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர்.

ஆரம்பத்தில் இனிதாக சென்ற இவர்களது வாழ்க்கையில் நாளடைவில் புயல் வீச தொடங்கியது. ஏனென்றால் வெங்கடேசன் குடிபழக்கத்துக்கு அடிமையானார். நாள்தோறும் குடித்துவிட்டு ரஞ்சினியிடம் தகராறு செய்து வந்தார்.

இதுபற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தார்கள். ஆனாலும் இந்த பிரச்சினை தீரவில்லை. தொடர்ந்து வெங்கடேசன் குடிபோதையில் வந்ததால் ரஞ்சினி தற்கொலை செய்துகொள்வது என முடிவு செய்தார்.

அதன்படி நேற்று ரஞ்சினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். ரஞ்சினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News