உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே எலி மருந்து சாப்பிட்ட வாலிபர் மரணம்
பண்ருட்டி அருகே எலி மருந்து சாப்பிட்ட வாலிபர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சதீஷ் வயது (20).
இவர் நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த வேலையில் வீட்டிலிருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை இன்று வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் இறந்தார்.
இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.