உள்ளூர் செய்திகள்
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்- போக்சோவில் வாலிபர் கைது
காரைக்காலில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
காரைக்கால்:
காரைக்கால் நார் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, திருவாரூர் அருகே நடப்பூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது25) என்ற வாலிபர் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காரைக்கால் டவுன் போலீசார் சதீஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் சதீஷின் செல் எண்ணை ஆய்வு செய்ததில், சதீஷ் சிவகங்கையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதை தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா உத்தரவின் பேரில், சிவகங்கை விரைந்த தனிப்படை போலீசார் சதீஷை கைது செய்து, 16 வயது சிறுமியை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட சதீஷை காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.
காரைக்கால் நார் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, திருவாரூர் அருகே நடப்பூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது25) என்ற வாலிபர் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காரைக்கால் டவுன் போலீசார் சதீஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் சதீஷின் செல் எண்ணை ஆய்வு செய்ததில், சதீஷ் சிவகங்கையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதை தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா உத்தரவின் பேரில், சிவகங்கை விரைந்த தனிப்படை போலீசார் சதீஷை கைது செய்து, 16 வயது சிறுமியை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட சதீஷை காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.