உள்ளூர் செய்திகள்
பாட்டாளி தொழிற்சங்க வாயிற் கூட்டம் நடத்திய காட்சி.

பாட்டாளி தொழிற்சங்க கூட்டம்

Published On 2022-05-11 14:15 IST   |   Update On 2022-05-11 14:15:00 IST
பி.ஆர்.டி.சி. தலைமை அலுவலகம் முன்பு பாட்டாளி தொழிற்சங்க வாயிற் கூட்டம் நடந்தினர்
புதுச்சேரி:

பி.ஆர்.டி.சி. பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பில் தலைமை அலுவலகம் முன்பு கண்டன வாயிற்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்றார். பொருளாளர் நந்தகுமார், செயல்  தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் ஜெயபாலன், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பாட்டாளி தொழிற்சங்க  பேரவை நிர்வாகிகள் சிவப்பிரகாசம், துரைக்கண்ணு, மாரிமுத்து, திருமலை, தணிகாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

கூட்டத்தில்  நிர்வாகிகள் ரமேஷ், சிவராமன், கதிரேசன், ராமன், முருகானந்தம், சித்ரா, வெற்றிவேலன், ராஜேஷ்வரராவ், அருள்விநாயகம், திருமுகம்,  வாணிஸ்ரீ, பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டனர். துணைத்தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

2015 முதல் பணி யாற்றிவரும்  ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மாதந்தோறும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும்.  முழு நேர மேலாண் இயக்குனரை நியமிக்க வேண்டும். அனைத்து பஸ்களையும் புதிதாக இயக்க வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு  இணையான சலுகைகளை ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஒரு ரூபாய் மாணவர் பஸ்களை பி.ஆர்.டி.சி. மூலம் இயக்க  வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டம்  நடந்தது.

Similar News