உள்ளூர் செய்திகள்
சமூக வலைதளங்களில் பெண்ணின் புகைப்படத்தை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வெளியிட்டதால் பரபரப்பு

சமூக வலைதளங்களில் பெண்ணின் புகைப்படத்தை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வெளியிட்டதால் பரபரப்பு

Published On 2022-05-10 11:18 GMT   |   Update On 2022-05-10 11:18 GMT
சமூக வலைதளங்களில் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்ட மாப்பிள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தில் 19 வயது பெண்ணுக்கு அதே பகுதியில் சேர்ந்த ஒரு நபருக்கு இரு வீட்டார் நிச்சயம் செய்து திருமணம் பேசி உள்ளனர். இதனை தொடர்ந்து இருவரும் போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர்.

மேலும் அந்தப்பெண் தனது நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு தனது புகைப்படத்தை அனுப்பி உள்ளார். இதனை தொடர்ந்து இவர்கள் தொடர்ந்து செல்போன் மூலம் பேசி வந்த நிலையில், திடீரென்று அந்த பெண்ணின் சொத்தை தனக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என தொந்தரவு செய்து வந்துள்ளார்.

மேலும் நிச்சயிக்கப்பட்ட பெண் யார் வீட்டிருக்கும் செல்லக்கூடாது. மேலும் அவர்களது உறவினர்கள் யாரும் திருமணத்திற்கு வரக்கூடாது என கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். அப்போது அந்த பெண், நபரிடம் ஏன் சமூக வலைத்தளங்களில் எங்களது புகைப்படத்தை போட்டு உள்ளீர்கள் என கேட்கும் போது இதற்கு சரியான பதில் அளிக்கவில்லை.

இது குறித்து அந்தப் பெண் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News