உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்
விருதுநகர் அருகே கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
விருதுநகர்
சிவகாசி நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் சாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கல்லூரி சென்ற இளம்பெண் மாயமாகி விட்டார்.
அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது பற்றி தெரிவயில்லை. இதுகுறித்து கருப்பசாமி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
சிவகாசி நாகேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கு 3மகள்கள் உள்ளனர். இதில் இளம்பெண்ணான ஒரு மகள் கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுபற்றி மகாலட்சுமி மாரனேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
விருதுநகர் நந்திரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மலர்விழி. இவர் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் திருமணமான மகள் ஒருவர் கர்ப்பிணியாக இருந்தார். அவர் வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார்.
அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி மலர்விழி ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கர்ப்பிணி பெண்ணை தேடி வருகின்றனர்.