உள்ளூர் செய்திகள்
தாக்குதல்.

ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

Published On 2022-05-10 15:37 IST   |   Update On 2022-05-10 15:37:00 IST
விருதுநகரில் ஆஸ்பத்திரி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்

விருதுநகர் அருகே முத்துராமப்பட்டியைச் சேர்ந்தவர் அன்புராஜா. இவர் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். அவரை பணிநீக்கம் செய்து விட்டதால் லாரியை வாங்கி அதனை ஓட்டி வந்தார். அன்புராஜா லாரிவாங்குவதற்கு காமாட்சி என்பவர் ரூ. 2 லட்சம் கடன் கொடுத்துள்ளார். அதற்கான வட்டியை கடந்த 3 மாதங்களாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து அன்புராஜா வீட்டுக்கு காமாட்சி, வேலு ஆகிய இருவரும் வந்து பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் அன்புராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Similar News