உள்ளூர் செய்திகள்
ராஜபாளையம் அருகே இளம்பெண் மாயமானார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அசையா மணிவிலக்கு பகுதியில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் குடில் அமைத்து சரவணன் (வயது31)என்பவர் ஆடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பர்வக்கொடி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவருடன் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் சரவ ணனின் மனைவி திடீரென மாயமாகி விட்டார் .அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் ,தனது மனைவி மாயமானது பற்றி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்.