உள்ளூர் செய்திகள்
விபத்து

லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்

Published On 2022-05-09 17:26 IST   |   Update On 2022-05-09 17:26:00 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் தொழில் அதிபர் படுகாயம் அடைந்தார்.
ராஜபாளையம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளத்தை சேர்ந்தவர் அருண்  (வயது 32 )தொழில் அதிபர். இவர் புல்லட் மோட்டார் சைக்கிளில் ராஜபாளையம்-மதுரை ரோட்டில் உள்ள மயூரநாதர் கோவில் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.

எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள், லாரியின் பின்பகுதியில் மோதி அருண் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி கோவையை சேர்ந்த லாரி டிரைவர் சுவாமிநாதன் ராஜ பாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News